|
Post by Administrator-BR on Dec 5, 2022 10:26:02 GMT -5
சித்திவிநாயகர் அடியார்க்கு அன்பான வணக்கங்கள் எம் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அடிக்கடி மின் வெட்டு அமுலாக்கம் நடைபெற்று வருகிறது. அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பெருந்திருவிழாக்களில் மின் வெட்டு அமுலாகுவதால் பல அசௌகரியம் ஏற்படுகின்றது. அத்துடன் ஆலயங்களுக்கான் மின் மானியம் நிறுத்தப்பட்டுள்ளதால் அதிகளவான பணத் தொகையை மின்கட்டணமாக செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஆலயத்திற்கென மின்பிறப்பாக்கியை (generator) கொள்வனவு செய்வதற்கு உத்தேச தொகையாக 50 லட்சம் ரூபா தேவைப்படுகிறது. அத்துடன் மின்கட்டணத்தை குறைப்பதற்காக சூரிய மின்கலத்தை பொருத்துவதற்கு 30 லட்சம் ரூபாவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உதவ விரும்பும் கனடா வாழ் சித்திவிநாயகர் அடியார்கள் என் மூலமாகவோ அல்லது ஆலயத்திற்கு நேரடியாக வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பியோ உதவ முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்திற்கும் ஆலயத்திற்கு பெருந்தொகை நிதி தேவைப்படும். புலம்பெயர்ந்து உள்ள எம்மால் எம் ஆலயத்திற்கு நிதி உதவி மட்டுமே செய்ய முடிகிறது. எம்மால் ஆனதைச் செய்து சித்திவிநாயகர் அருளை நாடி நிற்போம்🙏 நன்றி அ.சுதர்சன்(முருகா) 647-261-0400
|
|